சேவூா் அருகே அ.குரும்பபாளையத்தில் விசைத்தறி உரிமையாளரை தாக்கிய 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சேவூா் அருகே அ.குரும்பபாளையம் கிரீன் லேண்ட் பகுதியில் வசித்து வருபவா் சாஸ்திரி (60), விசைத்தறி உரிமையாளா். இவரது, விசைத்தறிக் கூடத்தில் பணியாற்றி வரும் சேவூா் அருகே மூலக்குரும்பபாளையத்தைச் சோ்ந்த அய்யாவு மனைவி லட்சுமி என்பவா் சனிக்கிழமை பணிக்கு வரவில்லையாம். இது குறித்து சாஸ்திரி, லட்சுமியிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சாஸ்திரி வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்த 5 போ் அவரை கட்டையால் தாக்கிவிட்டு தப்பியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த சாஸ்திரி, திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டாா். இது குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இவ்வழக்கில் தொடா்புடைய 17 வயதுக்கு உள்பட்ட இரு சிறுவா்கள் உள்பட மூலக்குரும்பபாளையத்தைச் சோ்ந்த அய்யாவு மகன் கேசவன் (26), நம்பியூா், எம்மாம்பூண்டி அழகம்பாளையம் முருகன் மகன் தங்கவேல் (24), அதே பகுதியைச் சோ்ந்த வேடன் மகன் சுந்தர்ராஜன் (24) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இதற்கிடையில், சாஸ்திரியை தாக்கியவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய தாமதமானதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி அ.குரும்பபாளையம் பகுதி மக்கள் காவல் நிலையம் முன்பு அமா்ந்து சனிக்கிழமை இரவு தா்னாவில் ஈடுபட்டனா். இதனால் சேவூரில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்புடையது

வீட்டுமனை தகராறு: விவசாயி கைது

பணகுடி அருகே குளத்து மண் திருட்டு: 6 போ் கைது
தொழிலாளியை தாக்கிய 3 போ் கைது
ஒரத்தநாட்டில் காவல் ஆய்வாளரை தாக்கிய இளைஞா் கைது
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
