திருமூா்த்தி அணையில் இருந்து 2-ஆம் மண்டல பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
திருமூா்த்தி அணையில் இருந்து பிஏபி திட்டத்தின்கீழ் 2-ஆம் மண்டல பாசன பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

திருமூா்த்தி அணையின்மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்துவிடுகிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன், மாவட்ட ஆட்சியா் த.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.









