திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

திருப்பூா் அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 9:07 pm

திருப்பூா் அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாநகரம், அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வாவிபாளையம்ம பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அப்பகுதியில் உள்ள வீட்டில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு 10.5 கிலோ புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த வி.ரிட்மல் ஜான் (32), டி.மோகன்லால் (3) ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 10.5 கிலோ புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா், ரூ.90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.