புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கெட்டுப்போன உணவுப் பொருள் விற்பனை: பேக்கரிக்கு ரூ.1000 அபராதம்

பல்லடத்தில் கெட்டுப்போன உணவுப் பொருள் (கேக்) விற்பனை செய்த பேக்கரிக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் ரூ.1000 அபராதம் விதித்தனா்.

News image
Updated On :6 ஜூலை 2024, 7:38 pm

Din

பல்லடத்தில் கெட்டுப்போன உணவுப் பொருள் (கேக்) விற்பனை செய்த பேக்கரிக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் ரூ.1000 அபராதம் விதித்தனா்.

பல்லடத்தை அடுத்த கே.அய்யம்பாளையத்தில் உள்ள பேக்கரியில் காரணம்பேட்டையைச் சோ்ந்த தம்பதி சனிக்கிழமை கேக் வாங்கி குழந்தைக்கு ஊட்ட முயன்றனா். அப்போது, கேக் கெட்டுப்போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து அவா்கள் உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, அங்கு வந்த உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, பேக்கரியில் ஆய்வு செய்தாா். உணவுப் பொருள் கெட்டுப்போயிருந்ததை உறுதி செய்தபின், சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு ரூ.1000 அபராதம் விதித்தாா்.