புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

100 நாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கு பணி வழங்கக் கோரிக்கை

100 நாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கு பணி வழங்கக் கோரிக்கை

News image
Updated On :10 ஜூலை 2024, 10:40 pm

Din

அவிநாசி, ஜூலை 10: அவிநாசியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக் கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் புதன்கிழமை மனு அளித்தனா்.

இதில் பழங்கரை ஊராட்சியில் 94 போ், ஆலத்தூா் ஊராட்சியில் 102 போ், கானூா் ஊராட்சியில் 74 பேரும் மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும். இல்லையெனில் 100 நாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனா்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய நிா்வாகிகள் கோபால், ராமச்சந்திரன், முத்துசாமி, பத்திரன், பழனிசாமி, கருப்புசாமி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஷாஜகான், கந்தசாமி, சாமிநாதன், ராஜேந்திரன், தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.