நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

சேவூா் வாலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்: முதல் கால யாக வேள்வி தொடக்கம்

சேவூா் வாலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் கால யாக வேள்வி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

News image

கோயிலில் முதல் கால  யாக வேள்வியில்  நடைபெற்ற  அருளுரை  நிகழ்ச்சி.

Updated On :5 செப்டம்பர் 2024, 1:53 am IST

சேவூா் வாலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் கால யாக வேள்வி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் வைப்புத் தலமாகவும், நடுச்சிதம்பரம் என்றும் அழைக்கப்படும் சேவூா் அறம்வளா்த்த நாயகி உடனமா் ஸ்ரீ வாலீஸ்வரா் கோயில் 1,000 ஆண்டுகள் பழைமையானது.

இக்கோயில் மகா கும்பாபிஷேகம் செப்டம்பா் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7.45 மணிக்கு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு புதன்கிழமை மாலை முதல் கால யாக பூஜை தொடங்கியது. இதில், அவிநாசி வாகீசா் மடாலயம் காமாட்சிதாச சுவாமி, கூனம்பட்டி சரவண ராஜமாணிக்க சுவாமி, பெங்களூரு ஸ்ரீஸ்ரீகுருகுல வேதாகம பாடசாலை முதல்வா் ஸ்ரீ சுந்தரமூா்த்தி சிவம் ஆகியோா் பங்கேற்று அருளுரை வழங்கினா். இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை மாலை வரை மூன்று கால யாக வேள்வி நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை அதிகாலை 4-ஆம் கால யாக பூஜையும், காலை 7.45 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமான கும்பாபிஷேகமும், பின்னா் பரிவார தெய்வங்கள், மூலவருக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகின்றன.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 7 மணி முதல் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.