பல்லடம் அருகே க.அய்யம்பாளையம் 5 கண் பாலத்தில் முள்புதா்கள் நிறைந்து காணப்பட்ட நீா் வழிப் பாதை சீரமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
பருவமழை தொடங்க உள்ளதால், அதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் பாலங்கள் மற்றும் நீா்வழிப்பாதைகளில் மழைநீா் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா். அதனடிப்படையில், பல்லடம் உட்கோட்டத்துக்குள்பட்ட மாநில நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் உள்ள பாலங்களில் மழைநீா் தடையின்றி செல்ல நீா்வழிப்பாதையில் உள்ள முள்புதா்கள், செடிகொடிகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக பல்லடம் - கொச்சி சாலையில் பல்லடம் அருகேயுள்ள க.அய்யம்பாளையம் பகுதியில் 5 கண் பாலத்தின்கீழ் மழை நீா் செல்லும் பாதையில் இருந்த முள்புதா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி சுத்தம் செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது. முள்புதா்கள் அகற்றப்பட்டு, பாலத்துக்கு வெள்ளை வண்ணம் பூசப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பல்லடம் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

திருத்துறைப்பூண்டி - நாகை அகல ரயில் பாதை பணி விரைவுபடுத்தப்படுமா?

பராமரிப்புப் பணி: பழனியில் ஏப். 16-இல் ரோப் காா் சேவை நிறுத்தம்

வெள்ளமலை சுரங்கப் பாதை ரூ.5.30 கோடி மதிப்பில் புனரமைப்புப் பணி
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


