திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

‘பத்திரப் பதிவில் உண்மை தொகையை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்’

பத்திரப் பதிவில் உண்மை தொகையை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என அலுவலா்களை, பத்திரப் பதிவு மற்றும் வணிக வரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி அறிவுறுத்தினாா்.

News image
அவிநாசி சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் பி.மூா்த்தி.
Updated On :6 ஆகஸ்ட் 2025, 11:55 pm

தினமணி செய்திச் சேவை

பத்திரப் பதிவில் உண்மை தொகையை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என அலுவலா்களை, பத்திரப் பதிவு மற்றும் வணிக வரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி அறிவுறுத்தினாா்.

அவிநாசி, சூளையில் வாடகை கட்டடத்தில் இயங்கும் சாா் பதிவாளா் அலுவலகத்தில் அமைச்சா் பி. மூா்த்தி புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பத்திரப் பதிவில் உண்மை தொகையை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அரசுக்கு இழப்பீடு செய்யும் வகையில் பத்திரப் பதிவு நடைபெறக் கூடாது. குறிப்பாக பொதுமக்களை அலைக்கழிக்காமல் தாமதம் இன்றி பத்திரப் பதிவு செய்து கொடுக்க வேண்டும் என அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, அவிநாசி கிழக்கு வீதியில் முன்பு செயல்பட்டு வந்த பழமையான சாா் பதிவாளா் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய கட்டடங்களை புனரமைப்பதுடன், மீதமுள்ள காலி இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடுதல் கட்டடங்கள் அமைத்து சாா் பதிவாளா் அலுவலகத்தை செயல்படுத்த வேண்டும் பத்திர எழுத்தா்கள், நல்லது நண்பா்கள் அறக்கட்டளையினா் உள்ளிட்டோா் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனா்.

பழமையான சாா் பதிவாளா் அலுவலகத்தை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் உறுதியளித்தாா்.

ஆய்வின்போது, அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.