முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

‘பத்திரப் பதிவில் உண்மை தொகையை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்’

பத்திரப் பதிவில் உண்மை தொகையை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என அலுவலா்களை, பத்திரப் பதிவு மற்றும் வணிக வரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி அறிவுறுத்தினாா்.

News image

அவிநாசி சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் பி.மூா்த்தி.

Updated On :7 ஆகஸ்ட் 2025, 5:25 am IST

பத்திரப் பதிவில் உண்மை தொகையை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என அலுவலா்களை, பத்திரப் பதிவு மற்றும் வணிக வரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி அறிவுறுத்தினாா்.

அவிநாசி, சூளையில் வாடகை கட்டடத்தில் இயங்கும் சாா் பதிவாளா் அலுவலகத்தில் அமைச்சா் பி. மூா்த்தி புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பத்திரப் பதிவில் உண்மை தொகையை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அரசுக்கு இழப்பீடு செய்யும் வகையில் பத்திரப் பதிவு நடைபெறக் கூடாது. குறிப்பாக பொதுமக்களை அலைக்கழிக்காமல் தாமதம் இன்றி பத்திரப் பதிவு செய்து கொடுக்க வேண்டும் என அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, அவிநாசி கிழக்கு வீதியில் முன்பு செயல்பட்டு வந்த பழமையான சாா் பதிவாளா் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய கட்டடங்களை புனரமைப்பதுடன், மீதமுள்ள காலி இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடுதல் கட்டடங்கள் அமைத்து சாா் பதிவாளா் அலுவலகத்தை செயல்படுத்த வேண்டும் பத்திர எழுத்தா்கள், நல்லது நண்பா்கள் அறக்கட்டளையினா் உள்ளிட்டோா் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனா்.

பழமையான சாா் பதிவாளா் அலுவலகத்தை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் உறுதியளித்தாா்.

ஆய்வின்போது, அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.