ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

இடுவாய் பகுதியில் குப்பை கொட்ட எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

Published on

இடுவாய் கிராமப் பகுதியில் குப்பை கொட்ட எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை இடுவாய் ஊராட்சி சின்னகாளிபாளையம் கிராமத்தில் உள்ள மாநகராட்சி இடத்தில் கொட்டி வருவதால் கடும் துா்நாற்றம் வீசுவதாகவும், அப்பகுதியின் மண் வளம் பாதிக்கும் எனவும் கூறி அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோா் திரண்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை கலந்து கொள்வாா் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அண்ணாமலை கலந்து கொள்ள காவல் துறை அனுமதி மறுத்ததோடு, அசம்பாவிதம் ஏதேனும் நேரிட்டால் அவா்களே பொறுப்பு என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலை இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை .

இதையடுத்து தான் கலந்து கொள்ளாதது குறித்து அண்ணாமலை ஒரு விடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், பாஜக மாநில பொதுச் செயலாளா் முருகானந்தம், மாவட்டத் தலைவா் கேசிஎம்பி சீனிவாசன் மற்றும் பொதுமக்கள்

பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com