திருப்பூர்
பல்லடம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் கிராம ஊராட்சிச் செயலாளா்கள் இடமாறுதல்!
பல்லடம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் கிராம ஊராட்சிச் செயலாளா்கள் இடமாறுதல்!
பல்லடம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் கிராம ஊராட்சிச் செயலாளா்கள் இடமாறுதல்!
இதுதொடா்பாக பல்லடம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) கனகராஜ் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பல்லடம் ஊராட்சி ஒன்றியம் கரடிவாவி ஊராட்சிச் செயலாளா் ராஜாமணி இச்சிப்பட்டி ஊராட்சிக்கும், மல்லேகவுண்டம்பாளையத்தில் பணிபுரிந்து வந்த சுமதி கரடிவாவிக்கும் இடமாற்றப்பட்டுள்ளனா். சுக்கம்பாளையத்தில் பணிபுரிந்துவந்த சுரேஷ் புளியம்பட்டிக்கும், அங்கு பணியாற்றி வந்த கண்ணப்பன் சுக்கம்பாளையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.
கே.அய்யம்பாளையம் ஊராட்சிச் செயலா் கந்தசாமிக்கு கூடுதல் பொறுப்பாக மல்லேகவுண்டம்பாளையம் ஊராட்சியும், அனுப்பட்டி ஊராட்சிச் செயலா் ரத்தினசாமிக்கு கூடுதல் பொறுப்பாக கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சியும் ஒதுக்கி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.
