திருப்பூர்
மூதாட்டியிடம் 8 பவுன் நகைப் பறிப்பு
திருப்பூரில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடமிருந்து 8 பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருப்பூரில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடமிருந்து 8 பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருப்பூா் தேவாங்கபுரம் பகுதியைச் சோ்ந்த 60 வயது மூதாட்டி, புஷ்பா ஜங்ஷன் அருகே உள்ள சந்தையில் காய்கறி வாங்கிக் கொண்டு வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை காலை தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த இருவா், அவரது அணிந்திருந்த 8 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இது குறித்த புகாரின்பேரில், திருப்பூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
