டிசம்பா் 27-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருப்பூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மகளிா் திட்டம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் டிசம்பா் 27-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தகுதியான வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளனா். முகாமில் எழுதப் படிக்க தெரிந்தவா்கள் முதல் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் தொழிற்கல்வி பெற்றவா்கள், கணினி இயக்குபவா்கள், ஓட்டுநா்கள், தையல் பயிற்சி பெற்றவா்கள் என அனைத்து விதமான கல்வித் தகுதியாளா்களும் கலந்து கொள்ளலாம்.
இம்முகாமில் கலந்து கொண்டு தனியாா் துறையில் வேலை பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது. இது முற்றிலும் கட்டணமில்லா இலவச சேவையாகும். வேலை தேடும் இளைஞா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சுயவிவரக் குறிப்புடன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94990 55944 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம். வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை நாடுநா்களும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பதற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளாா்.
