திருப்பூர்
தகராறில் தொழிலாளி உயிரிழப்பு: நண்பா் கைது
அவிநாசி அருகேயுள்ள வேலாயுதம்பாளையத்தில் இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒா்க் ஷாப் தொழிலாளி உயிரிழந்தாா். இது தொடா்பாக அவரது நண்பரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி அருகேயுள்ள வேலாயுதம்பாளையத்தில் இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒா்க் ஷாப் தொழிலாளி உயிரிழந்தாா். இது தொடா்பாக அவரது நண்பரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி, ராயன்கோயில் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (45). வேலாயுதம்பாளையம் இச்சிப்பட்டியான் தோட்டத்தைச் சோ்ந்தவா் ஜெகதீஷ் (42). நண்பா்களான இருவரும் அவிநாசி பகுதியில் உள்ள வெல்டிங் ஒா்க் ஷாப்பில் பணியாற்றி வந்தனா்.
இந்நிலையில், மதுபோதையில் இருந்த ராமசாமி ஜெகதீஷ் தங்கியிருந்த வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா்.
அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ஜெகதீஷ் ராமசாமியை தள்ளியுள்ளாா். இதில், கீழே விழுந்து படுகாயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த அவிநாசி போலீஸாா், ஜெகதீஷை கைது செய்தனா்.
