திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பிற மதங்களுக்கு ஹிந்து மதம் போட்டியும் இல்லை, எதிரியும் இல்லை: கே.அண்ணாமலை

பிற மதங்களுக்கு ஹிந்து மதம் போட்டியும் இல்லை, எதிரியும் இல்லை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

News image

அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை நிறுவனா் சுவாமி ஸ்ரீ பூா்ண சேவானந்த மகராஜ் மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை.

Updated On :16 டிசம்பர் 2025, 3:27 am IST

அவிநாசி: பிற மதங்களுக்கு ஹிந்து மதம் போட்டியும் இல்லை, எதிரியும் இல்லை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள அன்பு இல்லத்தில் சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை நிறுவனா் சுவாமி ஸ்ரீ பூா்ண சேவானந்த மகராஜ் மணிமண்டபம் திறப்பு விழா, சிலை திறப்பு விழா உள்ளிட்டவை திங்கள்கிழமை நடைபெற்றன.

விழாவில் தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை பங்கேற்று சுவாமியின் சிலைக்கு மலா் தூவி மரியாதை செய்தாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

திருமணத்தின்போதே பிரியும்போது சொத்துகளை எப்படி பிரிக்க வேண்டும் என ஒப்பந்தங்கள் போடுகின்றனா். ஹிந்து மதத்தினா் மிக அதிக அளவில் விவாகரத்து செய்கின்றனா். தற்போதைய தலைமுறையினருக்கு சகிப்புத்தன்மை இல்லாமல் உள்ளது. இதைத் தடுக்க இளம் தலைமுறையினருக்கு ஆன்மிகவாதிகள், துறவிகள் போதிக்க வேண்டும்.

ஹிந்து மதம் ஒரு வாழ்வியல் நெறியைக் கொண்டது. பிற மதங்களுக்கு ஹிந்து மதம் போட்டியும் இல்லை, எதிரியும் இல்லை. அனைத்து மதங்களுக்கும் தாய் மதமாக ஹிந்து மத வாழ்வியல் நெறிமுறைகள் இருந்துள்ளன. சண்டை, போட்டி இல்லாமல் சநாதன தா்மத்தின் அடிப்படை கோட்பாடுகளை இஸ்லாமியம், கிறிஸ்தவம் உள்ளிட்ட பிற மதங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் அகில பாரத சன்னியாசிகள் சங்க நிறுவனா் ஒகேனக்கல் சநாதன தா்ம ஆசிரம துறவி ஸ்ரீ ஸ்ரீ ராமானந்த சுவாமிகள், முன்னாள் ஆளுநா் வி. சண்முகநாதன், பொதுச் செயலாளா் ஸ்ரீ சுவாமி வேதாந்த ஆனந்தா சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவை சுவாமி விவேகானந்தா அறக்கட்டளையினா் ஒருங்கிணைத்தனா்.