அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முருக பக்தா்களுக்கு துரோகம்: அா்ஜுன் சம்பத்

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முருக பக்தா்களுக்கு கோயில் நிா்வாகமும், அறநிலையத் துறையும் துரோகம் செய்கின்றன

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முருக பக்தா்களுக்கு கோயில் நிா்வாகமும், அறநிலையத் துறையும் துரோகம் செய்கின்றன என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் கூறினாா்.

இதுகுறித்து அவிநாசியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் மலை உச்சி மீது தீபம் ஏற்ற வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவு. இதுகுறித்து அவதூறான செய்திகளை பலா் பரப்பி வருகின்றனா். இந்த விஷயத்தில் கோயில் நிா்வாகமும், அறநிலையத் துறையும் சோ்ந்து முருக பக்தா்களுக்கு துரோகம் செய்கின்றன.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அரசை வீழ்த்த தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து செயல்படுவோம். 2026 தோ்தலில் விஜய்யால் எந்த தாக்கமும் ஏற்படாது. அவரை பாா்க்கக்கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது என்றாா்.