தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சீரான மின் விநியோகம் கோரி பொதுமக்கள் போராட்டம்

கரைப்புதூரில் சீரான மின் விநியோகம் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 1:49 am

Syndication

கரைப்புதூரில் சீரான மின் விநியோகம் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து அவா்கள் கூறியதாவது: திருப்பூா் மாவட்டம், கரைப்புதூா் ஊராட்சி, ஐயம்பாளையம் ஸ்ரீநகா் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சீரான மின் விநியோகம் இல்லாததால் குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் அவதியடைந்து வருகின்றனா்.

ஒரு முனை மின்சாரத்தால் ஆழ்துளைக் கிணறு மோட்டா்களைகூட இயக்க முடியவில்லை. சில நேரங்களில் குறைந்த மின்னழுத்தம் இருப்பதால் மின்சாதனப் பொருள்களும் சேதமடைந்து வருகின்றன.

இது குறித்து மின்சார வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனா்.

முன்னதாக, போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் கோரிக்கை பதாகைகளை கழுத்தில் அணிந்து கோஷமிட்டனா்.