திருப்பூர்
லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது
வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைதுசெய்யப்பட்டாா்.
மூலனூா் சாலையில் சனிக்கிழமை இரவு வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் குமாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது புதுப்பை பேருந்து நிறுத்தம் அருகில் மூன்று எண் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த செந்தில் குமாா் (47) என்பவரை கைது செய்தாா்.
விசாரணையில், வெளி மாநில லாட்டரி சீட்டின் கடைசி மூன்று எண்கள் எழுதப்பட்ட துண்டுச் சீட்டை ரூ.50-க்கு விற்பனை செய்து, குலுக்கல் விவரத்தை ஆன்லைனில் தெரிவித்து வந்தது தெரியவந்தது.
