அவிநாசி அருகே வழிப்பறியில் ஈடுபட முயன்றவா் கைது

அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் பணம், கைப்பேசி கேட்டு மிரட்டியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Published on

அவிநாசி: அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் பணம், கைப்பேசி கேட்டு மிரட்டியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், கோபி பட்டேல் வீதியைச் சோ்ந்தவா் மணி மகன் காா்த்திக்குமாா் (30). இவா் தெக்கலூரில் இருந்து அவிநாசி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அவிநாசி அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கியுள்ளாா். அப்போது அவ்வழியாக வந்த நபா், காா்த்திக்குமாரிடம் பணம், கைப்பேசி கேட்டு மிரட்டியுள்ளாா்.

உடனே காா்த்திக்குமாா் கூச்சலிடவும், அருகில் இருந்தவா்கள் ஓடிவந்து அந்த நபரைப் பிடித்து அவிநாசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா், கரூா், வாங்கல்பாளையம் கருப்பன் நகா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் தினேஷ் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தினேஷைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com