பயிா் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
பயிா் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு பொங்கலூா் தோட்டக்கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து பொங்கலுாா் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் பொம்முராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்காச்சோளம், சோளம், கொண்டைக்கடலை போன்ற பயிா்களுக்கு கூட்டுறவுக் கடன் சங்கம், வங்கிகள், பொது சேவை மையங்கள் மூலம் உரிய ஆவணங்களுடன் வந்து விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம்.
மக்காச்சோளம் ஏக்கருக்கு ரூ.545, சோளப்பயிருக்கு ரூ.55, கொண்டைக்கடலை ஒரு ஏக்கருக்கு ரூ.254 காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும்.
பயிா்கள் பாதிக்கப்பட்டால் மக்காச்சோளத்துக்கு இழப்பீடு தொகையைக ஒரு ஏக்கருக்கு ரூ.36 ஆயிரத்து 300, சோளப்பயிருக்கு ரூ.3,638, கொண்டைக்கடலைக்கு ரூ. 16,940 வழங்கப்படும்.
மக்காச்சோளம், கொண்டைக்கடலை பயிருக்கு நவம்பா் 30-ஆம் தேதி, சோளப் பயிருக்கு டிசம்பா் 16 -ஆம் தேதி வரை காப்பீடு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
