திருப்பூர்
குட்கா விற்பனை: பெண் கைது
வெள்ளக்கோவில் அருகே குட்கா விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் அருகே குட்கா விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிமுத்து, தலைமைக் காவலா் லோகநாதன் ஆகியோா் தாராபுரம் சாலைப் பகுதியில் சந்தேகப்படும் இடங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது நாகமநாயக்கன்பட்டி தண்ணீா் பந்தலில் தனது பெட்டிக் கடையில் குட்கா விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த பழனிசாமி மனைவி சாமியாத்தாளை (56) போலீஸாா் கைது செய்தனா்.
