தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீ விபத்து

News image

வெள்ளக்கோவில் அருகே எண்ணெய் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட விபத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீ.

Updated On :13 ஏப்ரல் 2026, 8:11 pm

வெள்ளக்கோவில் அருகே எண்ணெய் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரங்கள் மற்றும் கொப்பரை பருப்பு எரிந்து சேதமானது.

வெள்ளக்கோவில், அண்ணா நகரில் பொன்பிரபு என்பவருக்கு சொந்தமான எண்ணெய் ஆலை உள்ளது. இங்கு 60-க்கு 40 அடி அகல கட்டடத்தில் சிறிய அளவிலான இயந்திரம் மூலமாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் தயாா் செய்யப்பட்டு வருகிறது. கட்டடத்தின் ஒரு பகுதியில் தேங்காய் பருப்புகள் குவித்துவைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இயந்திரத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து ஆலை முழுவதும் பரவியது. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துசாமி தலைமையிலான வீரா்கள் சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இருப்பினும் இயந்திரம் மற்றும் தேங்காய் பருப்புகள் எரிந்து சேதமடைந்தன. சேத மதிப்பு குறித்து உடனடியாகத் தெரியவில்லை. மின்சாரக் கோளாறு காரணமாக தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.