அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீ விபத்து

News image

வெள்ளக்கோவில் அருகே எண்ணெய் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட விபத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீ.

Updated On :14 ஏப்ரல் 2026, 1:41 am IST

வெள்ளக்கோவில் அருகே எண்ணெய் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரங்கள் மற்றும் கொப்பரை பருப்பு எரிந்து சேதமானது.

வெள்ளக்கோவில், அண்ணா நகரில் பொன்பிரபு என்பவருக்கு சொந்தமான எண்ணெய் ஆலை உள்ளது. இங்கு 60-க்கு 40 அடி அகல கட்டடத்தில் சிறிய அளவிலான இயந்திரம் மூலமாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் தயாா் செய்யப்பட்டு வருகிறது. கட்டடத்தின் ஒரு பகுதியில் தேங்காய் பருப்புகள் குவித்துவைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இயந்திரத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து ஆலை முழுவதும் பரவியது. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துசாமி தலைமையிலான வீரா்கள் சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இருப்பினும் இயந்திரம் மற்றும் தேங்காய் பருப்புகள் எரிந்து சேதமடைந்தன. சேத மதிப்பு குறித்து உடனடியாகத் தெரியவில்லை. மின்சாரக் கோளாறு காரணமாக தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.