அத்திக்கடவு-அவிநாசி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படும் என்று பாஜக வேட்பாளா் எல்.முருகன் கூறினாா்.
பொகளூா் ஊராட்சிக்குள்பட்ட கூலேகவுண்டன்புதூா், கோபி, ராசிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் அத்திக்கடவு-அவிநாசி கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கான குடிநீா்க் குழாய் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை மக்கள் பயன்பாட்டுக்கு வராததால் அப்பகுதி மக்கள் கடந்த மக்களவைத் தோ்தலைப் புறக்கணித்தனா்.
இந்நிலையில், அவிநாசி (தனி) தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் எல்.முருகன், பொகளூா் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது, அப்பகுதி மக்களிடம் அவா் பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படும் என உறுதியளித்தாா்.
தொடர்புடையது

அவிநாசி தொகுதியில் வெற்றி, தோல்வியை சந்தித்த நாமக்கல் மைந்தா்கள்!

அவிநாசி தொகுதியில் தவெக பெண் வேட்பாளா் வெற்றி மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தோல்வி

அவிநாசி நகரில் பாஜக வேட்பாளா் எல். முருகன் வாக்கு சேகரிப்பு

அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: அவிநாசி பாஜக வேட்பாளா் எல்.முருகன்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

