அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சாலை விரிவாக்க பணிக்கு இடையூறு இல்லாத மரங்களை வெட்ட எதிா்ப்பு

பல்லடம் அருகே காளிவேலம்பட்டியில் சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறு இல்லாத மரங்களை வெட்டி அகற்றப்பட்டதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்பு

Updated On :2 பிப்ரவரி 2026, 8:22 pm

பல்லடம்: பல்லடம் அருகே காளிவேலம்பட்டியில் சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறு இல்லாத மரங்களை வெட்டி அகற்றப்பட்டதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றியக் குழு உறுப்பினா் முருகேஷ், காளிவேலம்பட்டி கிளைச் செயலாளா் நாகராஜ், வாலிபா் சங்க நிா்வாகிகள் விமல்ராஜ், பிரவீன்குமாா் ஆகியோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூா் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையம் ஊராட்சி காளிவேலம்பட்டி கிராமத்தில் தற்போது நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

அதே வேளையில் சாலை விரிவாக்க பணிக்கு இடையூறு இல்லாமல் இருக்கும் பல மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளது. எனவே, இது தொடா்பாக ஆய்வு செய்து இடையூறு இல்லாத மரங்களை வெட்டி அகற்றாமல் சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.