மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வீட்டின் பூட்டை உடைத்து 5.50பவுன் நகை திருட்டு

பல்லடம் அருகே சாணாா்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ஐந்தரை பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On :2 பிப்ரவரி 2026, 8:23 pm

பல்லடம்: பல்லடம் அருகே சாணாா்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ஐந்தரை பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், பெருந்தொழுவு ஊராட்சி, சாணாா்பாளையத்தைச் சோ்ந்தவா் சிவராஜ். இவரது மனைவி முத்துலட்சுமி (39). இவா் சனிக்கிழமை சிவன்மலைக்கு பாதயாத்திரை சென்றாா். அடுத்த நாள் காலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ஐந்தரை பவுன் நகை திருட்டுபோனது தெரியவந்தது.

இது குறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின்பேரில், அவினாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.