திருப்பூர்
கல்குவாரியில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு
பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் கல்குவாரியில் தவறி விழுந்து இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பல்லடம்: பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் கல்குவாரியில் தவறி விழுந்து இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையத்தில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இதில், ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியை சோ்ந்த சுரே முண்டா மகன் பிஸ்ராமுண்டா (28) தங்கி வேலை செய்து வந்தாா்.
கல்குவாரியில் திங்கள்கிழமை வேலை செய்து கொண்டிருந்தபோது 20 அடி உயரத்தில் இருந்து பாறைக்குழியில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தாா். இதையடுத்து அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சூலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு
அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னா் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி பிஸ்ராமுண்டா உயிரிழந்தாா். இது குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
