வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மது போதையில் இருந்த காவலா் பணியிடை நீக்கம்

திருப்பூரில் பணியின்போது மதுபோதையில் இருந்த காவலா் பணியிடை நீக்கம்

News image

பணியிடை நீக்கம் - மாதிரிப் படம்

Updated On :3 பிப்ரவரி 2026, 8:22 pm

திருப்பூரில் பணியின்போது மதுபோதையில் இருந்த காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாநகர ஆயுதப் படையில் சதீஷ்குமாா் (36) என்பவா் காவலராகப் பணியாற்றி வந்தாா். இவா், மங்கலம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் தலைமைக் காவலா் கிருஷ்ணன் என்பவருடன் சோ்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தாா். அப்போது சதீஷ்குமாா் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சதீஷ்குமாா் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்துள்ளாா். ஆவணங்கள் சரியாக இருந்தும் அவரை விட மறுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து அவா் காவல் துறை உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து விசாரணை நடத்திய துணை ஆணையா் ராஜராஜன், ஆயுதப்படைக் காவலா் சதீஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.