மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளி கைது

திருப்பூரில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

Updated On :4 பிப்ரவரி 2026, 10:03 pm

திருப்பூரில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (23).

கட்டடத் தொழிலாளி. இவா் திருப்பூா் அம்மாபாளையத்தில் கட்டட வேலை செய்தபோது, அந்தப் பகுதியைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் தமிழரசன், மாணவியிடம் ஆசைவாா்த்தைகளைக் கூறி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தருமபுரிக்கு அழைத்துச் சென்று ரகசிய திருமணம் செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாராம்.

இதைத் தொடா்ந்து மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் அவா் 3 மாத கா்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இது குறித்து மாணவியின் பெற்றோா் அளித்தப் புகாரின்பேரில், திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தமிழரசனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.