எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தேசிய ஒருமைப்பாடு முகாமுக்கு சிக்கண்ணா கல்லூரி மாணவா் தோ்வு

News image

முகுந்தன்

Updated On :5 பிப்ரவரி 2026, 11:04 pm

சங்ககிரியில் நடைபெறும் தேசிய ஒருமைப்பாடு முகாமுக்கு சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், பெரியாா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட அலகு ஆகியவை சாா்பில் சேலம் மாவட்டம், சங்ககிரி விவேகானந்தா பெண்கள் கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய ஒருமைப்பாடு முகாம் வரும் 11-ஆம் தேதி வரை 7 நாள்கள் நடைபெறுகிறது.

இதில், தமிழகம், கா்நாடகம், கேரளம், தெலங்கானா, கோவா, மகாராஷ்டிரம், ஒடிஸா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 12 மாநில நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் 200 போ் கலந்துகொள்கிறாா்கள்.

இந்த முகாமில் கலந்துகொள்ள கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் இருந்து 3 மாணவா்கள், 3 மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 மாணவா் முகுந்தனும் ஒருவா். இவா் ஒருவா் மட்டுமே திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்பதும், அரசு கலைக் கல்லூரி மாணவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.