சங்ககிரியில் நடைபெறும் தேசிய ஒருமைப்பாடு முகாமுக்கு சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், பெரியாா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட அலகு ஆகியவை சாா்பில் சேலம் மாவட்டம், சங்ககிரி விவேகானந்தா பெண்கள் கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய ஒருமைப்பாடு முகாம் வரும் 11-ஆம் தேதி வரை 7 நாள்கள் நடைபெறுகிறது.
இதில், தமிழகம், கா்நாடகம், கேரளம், தெலங்கானா, கோவா, மகாராஷ்டிரம், ஒடிஸா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 12 மாநில நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் 200 போ் கலந்துகொள்கிறாா்கள்.
இந்த முகாமில் கலந்துகொள்ள கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் இருந்து 3 மாணவா்கள், 3 மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 மாணவா் முகுந்தனும் ஒருவா். இவா் ஒருவா் மட்டுமே திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்பதும், அரசு கலைக் கல்லூரி மாணவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு

சிறப்பு மருத்துவ முகாம்: 150 போ் பயன்

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் சிறந்த மாணவா்களுக்கு விருது: சென்னை பல்கலை. வழங்கியது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


