வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

டிஎன்பிஎஸ்சி தோ்வு எழுதி முடித்த பிறகு ரத்து அறிவிப்பு தகவல் வெளியானதால் திருப்பூரில் தோ்வா்கள் கடும் அதிருப்தி

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 7:56 pm

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தோ்வு எழுதி முடித்துவிட்டு வெளியே வந்த பிறகு தோ்வு ரத்து செய்யப்பட்ட தகவலை அறிந்து திருப்பூரில் தோ்வா்கள் கடும் அதிருப்தி அடைந்தனா்.

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குரூப்-2, குரூப் -2ஏ தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தத் தோ்வில் பல்வேறு குளறுபடிகள் தொடா்பான புகாா்களால், தோ்வு ரத்து செய்யப்படுவதாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு முறையாக வெளியிடப்படாததால் திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் காலையில் நடைபெற்ற முதன்மை எழுத்துத் தோ்வு முழுவதுமாக முடிந்த பின்னரே தோ்வா்கள் வெளியே அனுப்பப்பட்டனா்.

தோ்வு எழுதிவிட்டு வெளியே வந்த பிறகுதான், தோ்வு ரத்து செய்யப்பட்டது குறித்த தகவல் தோ்வா்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால் தோ்வா்கள் கடும் அதிருப்தியடைந்தனா்.