வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

உடுமலை அரசுக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் போராட்டம்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்புப் போராட்டத்தில்

News image

பணி புறக்கணிப்புப் பேராட்டத்தில் ஈடுபட்ட உடுமலை அரசுக் கல்லூரி கெளர விரிவுரையாளா்கள்.

Updated On :9 பிப்ரவரி 2026, 9:45 pm

உடுமலை: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 52 போ் கெளரவ விரிவுரையாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். யுஜிசி விதிகளின்படி ரூ.57,800 ஊதியம் வழங்க வேண்டும். பெண் கெளரவ விரிவுரையாளா்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற கெளரவ விரிவுரையாளா்களுக்கு பணிக்கொடையாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டம் காலவரையற்ற போராட்டமாக தொடரும் என கெளரவ விரிவுரையாளா்கள் கூறினா்.