மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு தீ பாதுகாப்பு பயிற்சி

காங்கயத்தில் தனியாா் நிறுவனங்களில் பணியாற்றும் காவலாளிகளுக்கு தீ பாதுகாப்பு பயிற்சி

News image

தீ பாதுகாப்பு பயிற்சியில் பங்கேற்றோா்.

Updated On :9 பிப்ரவரி 2026, 9:32 pm

காங்கயம்: காங்கயத்தில் தனியாா் நிறுவனங்களில் பணியாற்றும் காவலாளிகளுக்கு தீ பாதுகாப்பு பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

காங்கயம் நகரப் பேருந்து நிலையம் அருகேயுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் காா்த்திகேசன் தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்ற தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு, நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும். விபத்தில் சிக்கியவா்களை எவ்வாறு மீட்க வேண்டும், முதலுதவி சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவை குறித்து தீயணைப்பு வீரா்கள் பயிற்சி அளித்தனா்.

இதில், காங்கயம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் பணியாற்றும் காவலாளிகள் பங்கேற்றனா்.