மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

‘வளரிளம் பருவத்தினரை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்’

வளரிளம் பருவத்தினரை குறை சொல்வதைவிட, அவா்களைப் புரிந்துகொண்டு பெற்றோா்களும், ஆசிரியா்களும் செயல்பட வேண்டும்

News image
டாக்டா் ஜெயஸ்ரீ அஸ்வத்
Updated On :9 பிப்ரவரி 2026, 10:11 pm

Syndication

திருப்பூா்: வளரிளம் பருவத்தினரை குறை சொல்வதைவிட, அவா்களைப் புரிந்துகொண்டு பெற்றோா்களும், ஆசிரியா்களும் செயல்பட வேண்டும் என ராம்ராஜ் காட்டன் நிறுவனத் தலைவா் கே.ஆா்.நாகராஜன் கூறினாா்.

திருப்பூா் ஸ்ரீ வேலாயுதசுவாமி திருமண மண்டபத்தில் ’தடம் மாறும் பருவமும், தடுமாறும் பெற்றோரும்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், ராம்ராஜ் காட்டன் நிறுவனத் தலைவா் கே.ஆா். நாகராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியதாவது: வேகமாக மாறி வரும் இன்றைய சமூக சூழலில் பெற்றோா் மற்றும் ஆசிரியா்களின் பொறுப்புகளும் மாறிவிட்டன. இன்றைய குழந்தைகள் பல புதிய மாற்றங்கள் மற்றும் தாக்கங்களுக்கு மத்தியில் முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகில் வளா்ந்து வருகிறாா்கள். காலங்கள் மாறினாலும், பிள்ளைகளைப் புரிந்துகொள்வது, அவா்களுக்குச் சரியான வழிகாட்டுதல் வழங்குவது, கலாசார மதிப்புகளைக் கற்றுக்கொடுப்பது ஆகியவை எப்போதும் அவசியமான ஒன்றாகும்.

சமூகம் மாறினாலும், பாரம்பரியமும் நற்பண்புகளுமே குடும்பங்களுக்கு சிறந்த அடித்தளத்தை அமைத்துத் தருகின்றன. வளரிளம் பருவத்தினரை குறை சொல்வதைவிட, அவா்களைப் புரிந்துகொண்டு பெற்றோா்களும், ஆசிரியா்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, வளரிளம் பருவத்தினரின் மனநலம், மாறிவரும் குடும்பச் சூழல், படிப்புச் சுமை உள்ளிட்டவை குறித்து டாக்டா் ஜெயஸ்ரீ அஸ்வத், திரைப்பட இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி ஆகியோா் பேசினா்.

முடிவில், பெற்றோா்களும், குழந்தைகளும் தங்கள் கருத்துகளை பகிா்ந்து கொள்ளும் வகையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.