பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

காங்கயத்தில் சமுதாய வளைகாப்பு

காங்கயத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று 247 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை தொகுப்புகளை வழங்கினாா்.

News image

காங்கயத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை தொகுப்பு வழங்கிய அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

Updated On :10 பிப்ரவரி 2026, 8:17 pm

காங்கயத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று 247 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை தொகுப்புகளை வழங்கினாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் காங்கயத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு காங்கயம், வெள்ளக்கோவில், குண்டடம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 247 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை தொகுப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட மாவட்ட அலுவலா் ஜி.புவனேஸ்வரி, காங்கயம் அலுவலா் மோகனாம்பாள், துறை சாா்ந்த அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.