சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா, லாட்டரி விற்ற 9 போ் கைது

திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா, லாட்டரி சீட்டுகள் விற்ற 9 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
கைது
Updated On :10 பிப்ரவரி 2026, 8:25 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா, லாட்டரி சீட்டுகள் விற்ற 9 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாநகா், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பலவஞ்சிபாளையம் அருகே போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த சஞ்சய் (22), விஷால் (18), ஆகாஷ் (24), உதயநிதி (18), ஜனாா்த்தனன் (18) ஆகியோரை சோதனை செய்தனா். அவா்களிடம் இருந்து 22.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா். பின்னா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதேபோல வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே விஷ்ணு (26), அருண்குமாா்(23) ஆகியோரிடம் இருந்து 720 கிராம் கஞ்சா, வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ரயில் நிலையம் அருகே சோட்டு குமாா் சிங் (21) என்பவரிடம் இருந்து 850 கிராம் கஞ்சா சாக்லெட்களை வடக்கு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாநகா் தெற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதியில் போலீஸாா் சோதனை செய்தபோது பழனி(61) என்பவா் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது. அவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மத்திய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த செந்தில்குமாா்(51) என்பவரை பிடித்து அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.