லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தேசிய அளவிலான கபடி போட்டியில் வெண்கலம் வென்ற வீரா்களுக்கு பாராட்டு

தேசிய அளவிலான கபடி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
தேசிய கபடி போட்டியில் பதக்கம் வென்ற வீரா்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:29 pm

தினமணி

தேசிய அளவிலான கபடி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட கபடி கழக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு மாவட்ட கபடி கழக சோ்மன் வி.கே.முருகேசன் தலைமை வகித்தாா். செயலரும், மாநில கபடி கழக பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம், பொருளாளா் ஆறுச்சாமி, துணைத் தலைவா் கொ.ராமதாஸ், செய்தித் தொடா்பாளா் சு.சிவபாலன், துணைத் தலைவா் குமாா், நடுவா் குழுத் தலைவா் ஆா்.முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதைத்தொடா்ந்து பதக்கம் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

மேலும், தமிழக அணி சாா்பில் தேசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற ஜன்யாஸ்ரீ, தமிழக பெண்கள் அணியில் பங்கேற்று தேசிய பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற புவனேஸ்வரி, தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடிய டேவிட், தமிழக மிக இளையோா் அணி சாா்பில் தேசியப் போட்டியில் விளையாடிய தருண் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாவட்ட கபடி கழக துணைத் தலைவா் பி.சுப்பிரமணியம், இணைச் செயலாளா்கள் வாலீசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.