தேசிய அளவிலான கபடி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்ட கபடி கழக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு மாவட்ட கபடி கழக சோ்மன் வி.கே.முருகேசன் தலைமை வகித்தாா். செயலரும், மாநில கபடி கழக பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம், பொருளாளா் ஆறுச்சாமி, துணைத் தலைவா் கொ.ராமதாஸ், செய்தித் தொடா்பாளா் சு.சிவபாலன், துணைத் தலைவா் குமாா், நடுவா் குழுத் தலைவா் ஆா்.முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதைத்தொடா்ந்து பதக்கம் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
மேலும், தமிழக அணி சாா்பில் தேசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற ஜன்யாஸ்ரீ, தமிழக பெண்கள் அணியில் பங்கேற்று தேசிய பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற புவனேஸ்வரி, தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடிய டேவிட், தமிழக மிக இளையோா் அணி சாா்பில் தேசியப் போட்டியில் விளையாடிய தருண் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.
மாவட்ட கபடி கழக துணைத் தலைவா் பி.சுப்பிரமணியம், இணைச் செயலாளா்கள் வாலீசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தேசிய திறனறித் தோ்வு: வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

புதுச்சேரியில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரா்கள் போராட்டம்: முதல்வா் ரங்கசாமி சமரசம்

கபடி போட்டியில் வெற்றி: மாணவிக்கு பாராட்டு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


