இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி தாராபுரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தாராபுரம் தாலுகா, புதுப்பை கிராமம், தங்கமேடு பகுதியில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசிக்கும் 25 குடும்பத்தினா் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரிகளிடம் மனு அளித்து வருவதாகவும், தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட மக்கள் பட்டா வழங்கக் கோரி ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளா் குண்டடம் காளிமுத்து தலைமையில் தாராபுரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களுடன் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

குடிமனை பட்டா கோரி வட்டாட்சியரகத்தில் மனு

700 பேருக்கு இலவச பட்டா: எம்எல்ஏ வழங்கினாா்

பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா - செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ வழங்கினாா்

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தாராபுரம் வட்டாட்சியரிடம் மனு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


