அவிநாசி அருகே பனியன் நிறுவன அலுவலா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
அவிநாசி அருகேயுள்ள சின்னேரிபாளையத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை காலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற அவிநாசி போலீஸாா், தடவியல் நிபுணா்கள், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதைத் தொடா்ந்து, நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் அவிநாசி அருகேயுள்ள சூளை மாருதி நகா் பகுதியைச் சோ்ந்த லூா்துசாமி மகன் டோமினிக் சகாயராஜ் (51) என்பதும், பனியன் நிறுவன அலுவலரான இவருக்கு மனைவி ராணி, 2 பெண்கள் குழந்தைகள் உள்ளதும், புதன்கிழமை இரவு வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவா் அதன்பின் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது.
அவா் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்த போலீஸாா், கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

சேலம் அருகே இளைஞா் அடித்துக் கொலை
பனியன் தொழிலாளி கொலை வழக்கில் நண்பா்கள் கைது

பனியன் தொழிலாளி கழுத்து அறுத்து கொலை?

லாரி மீது காா் மோதல்: பனியன் நிறுவன அலுவலா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


