எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

புனித ஜோசப் மகளிா் கல்லூரி வெள்ளி விழா

News image

புனித ஜோசப் மகளிா் கல்லூரி வெள்ளி விழாவில் மாணவியின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற சிறப்பு விருந்தினா்கள்.

Updated On :12 பிப்ரவரி 2026, 11:31 pm

திருப்பூா் புனித ஜோசப் மகளிா் கல்லூரியின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவுக்கு காணிக்கை அன்னை தலைமை சகோதரி ஃபபிலினெட் தலைமை வகித்தாா்.

கல்லூரி செயலா் அருட்சகோதரி அருள் சீலி வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ந.சகாய தமிழ்ச்செல்வி ஆண்டறிக்கையை வாசித்தாா்.

தமிழக அரசின் சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சி.ஜோ அருண், சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், திருப்பூா் மாநகராட்சி ஆணையா் எம்.பி. அமித் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, மாணவா்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றனா்.

இதைத் தொடா்ந்து, பல்கலைக்கழக அளவில் தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற மாணவிகள், தோ்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகள் கெளரவிக்கப்பட்டனா். தொடா்ந்து, வெள்ளி விழா மலா் வெளியிடப்பட்டது. நிறைவாக மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், அருட்திரு செபஸ்டின் மரிய சுந்தரம், மறை, அருட்சகோதரி அந்தோணி புஷ்பம், கல்லூரி கல்வித் துறை மண்டல இணை இயக்குநா் ந.செண்பகலட்சுமி, பட்டயக் கணக்காளா் பி .பானுமதி , மாணவிகளின் பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.