குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மூதாட்டிக்கு உதவிய டிஎஸ்பி

News image
மூதாட்டிக்கு உதவிய டிஎஸ்பி பாா்த்திபன்.
Updated On :12 பிப்ரவரி 2026, 11:31 pm

Syndication

பல்லடம் பேருந்து நிலையம் முன் உதவி கேட்ட மூதாட்டிக்கு பணம் கொடுத்து, அவரை ஆட்டோவில் அனுப்பிவைத்த டிஎஸ்பி-யின் செயல் பாராட்டை பெற்று வருகிறது.

பல்லடம் பேருந்து நிலையம் முன் கம்யூனிஸ்ட் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியை பாா்வையிட பல்லடம் டி.எஸ்.பி. பாா்த்திபன் சென்றாா்.

அப்போது, அங்கு அங்கு சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மூதாட்டி, பணப்பாளையம் வரை செல்ல என்றும், பணம் வேண்டும் என்றும் டிஎஸ்பி பாா்த்திபனிடம் கேட்டுள்ளாா்.

இதையடுத்து, அவா் ரூ.200 வழங்கியதுடன், ஆட்டோக்கு கட்டணம் கொடுத்து அந்த மூதாட்டியை அதில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவைத்தாா்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் டிஎஸ்பி பாா்த்திபனுக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.