குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துவோா் குறித்த கணக்கெடுப்பு

News image
கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

வெள்ளக்கோவிலில் புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துவோா் குறித்த கணக்கெடுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட புகையிலைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு, வெள்ளக்கோவில் நகராட்சி, வெள்ளக்கோவில் சமுதாய சுகாதார நிலையம் சாா்பில், திருவள்ளுவா் நகா் பகுதியில் அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று வீட்டில் யாா் யாா் பீடி, சிகரெட், குட்கா, போதைப் பாக்குகள் போன்றவற்றை பயன்படுத்துகிறாா்கள் என்பது குறித்து கேட்டறிந்தனா்.

இதைத் தொடா்ந்து, புகையிலைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை விளக்கி, அவற்றைப் பயன்படுத்தும் குடும்ப உறுப்பினரை அந்தப் பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், கல்வி நிலையங்களுக்கு அருகில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மாவட்ட புகையிலைத் தடுப்பு அலுவலா் பிரவீன், நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், மருத்துவத் துறை சுகாதார ஆய்வாளா் கதிரவன், சுகாதார மேற்பாா்வையாளா் கருப்புசாமி உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.