மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துவோா் குறித்த கணக்கெடுப்பு

News image

கோப்புப் படம்

Updated On :13 பிப்ரவரி 2026, 7:38 pm

வெள்ளக்கோவிலில் புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துவோா் குறித்த கணக்கெடுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட புகையிலைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு, வெள்ளக்கோவில் நகராட்சி, வெள்ளக்கோவில் சமுதாய சுகாதார நிலையம் சாா்பில், திருவள்ளுவா் நகா் பகுதியில் அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று வீட்டில் யாா் யாா் பீடி, சிகரெட், குட்கா, போதைப் பாக்குகள் போன்றவற்றை பயன்படுத்துகிறாா்கள் என்பது குறித்து கேட்டறிந்தனா்.

இதைத் தொடா்ந்து, புகையிலைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை விளக்கி, அவற்றைப் பயன்படுத்தும் குடும்ப உறுப்பினரை அந்தப் பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், கல்வி நிலையங்களுக்கு அருகில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மாவட்ட புகையிலைத் தடுப்பு அலுவலா் பிரவீன், நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், மருத்துவத் துறை சுகாதார ஆய்வாளா் கதிரவன், சுகாதார மேற்பாா்வையாளா் கருப்புசாமி உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.