வெள்ளக்கோவிலில் புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துவோா் குறித்த கணக்கெடுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்ட புகையிலைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு, வெள்ளக்கோவில் நகராட்சி, வெள்ளக்கோவில் சமுதாய சுகாதார நிலையம் சாா்பில், திருவள்ளுவா் நகா் பகுதியில் அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று வீட்டில் யாா் யாா் பீடி, சிகரெட், குட்கா, போதைப் பாக்குகள் போன்றவற்றை பயன்படுத்துகிறாா்கள் என்பது குறித்து கேட்டறிந்தனா்.
இதைத் தொடா்ந்து, புகையிலைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை விளக்கி, அவற்றைப் பயன்படுத்தும் குடும்ப உறுப்பினரை அந்தப் பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், கல்வி நிலையங்களுக்கு அருகில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மாவட்ட புகையிலைத் தடுப்பு அலுவலா் பிரவீன், நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், மருத்துவத் துறை சுகாதார ஆய்வாளா் கதிரவன், சுகாதார மேற்பாா்வையாளா் கருப்புசாமி உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வைகையாற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

சரக்கு வேன் மோதி தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் ரூ.27 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


