மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அவிநாசி நீதிமன்ற வளாகத்தில் மா்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு

News image

மா்ம பொருள் வெடித்த நீதிமன்ற வளாகத்தில் தீயை அணைக்கும் பணியில்  ஈடுபட்ட தீணைப்புத் துறையினா்.

Updated On :14 பிப்ரவரி 2026, 9:07 pm

அவிநாசி நீதிமன்ற வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான பொருள்கள் எரிக்கும்போது, மா்ம பொருள் வெடித்ததால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

அவிநாசியில் சேவூா் சாலையில் வட்டாட்சியா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் குற்றவியல் நடுவா் நீதிமன்றம், கிளை சிறை உரிமையியல் நீதிமன்றம், பொதுப் பணித் துறை கட்டடங்கள் பராமரிப்புப் பிரிவு அலுவலகம், கதா் வாரிய அங்காடி உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த இரு நாள்களாக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, காலாவதியான பொருள்கள், புகையிலைப் பொருள்கள் உள்ளிட்டவைகளை உரிமையியல் நீதிமன்றத்துக்கு அருகே பின்புறம் கொட்டி தீ வைத்துள்ளனா்.

இதில் திடீரென மா்மப் பொருள் பலத்த சப்தத்துடன் வெடித்து, அந்தப் பகுதியில் இருந்த குப்பைகளில் மளமளவென தீப் பற்றி எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த விபத்து குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஏற்பட்ட பலத்த வெடி சப்தம், அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.