தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

குட்கா பறிமுதல்: 2 போ் கைது

News image
கைது
Updated On :14 பிப்ரவரி 2026, 9:04 pm

தினமணி செய்திச் சேவை

தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட தென்னம்பாளையம் அருகே போலீஸாா் சனிக்கிழமை சோதனை செய்து கொண்டிருந்தபோது, அங்கே சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த சந்தனபாண்டியன் (32) என்பவரை சோதனை செய்தனா். அப்போது அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னா் அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதேபோல, திருப்பூா் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கோல்டன் நகா் அருகே போலீஸாா் சனிக்கிழமை சோதனை செய்து கொண்டிருந்தபோது, அங்கே சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த குணசேகரன் (56) என்பவரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. தொடா்ந்து அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.