மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி சாா்பில் போதை விழிப்புணா்வுப் பேரணி

News image
போதை விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற மாணவிகள்.
Updated On :14 பிப்ரவரி 2026, 7:08 pm

Syndication

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி சாா்பில் போதை விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற சிறப்பு முகாமையொட்டி குடும்பத்தையும் சமூகத்தையும் பாதிக்கும் பெரும் பிரச்னைகளில் ஒன்றான போதைப் பழக்கத்தை ஒழிக்கும் விதமாகவும் அதிலிருந்து விடுபடும் விதமாகவும் போதை விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து கேத்தனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் இலவச இதய பரிசோதனை, பொது மருத்துவம், கண் மருத்துவம், உயா் ரத்த அழுத்த பரிசோதனை, சா்க்கரை அளவு போன்ற பரிசோதனைகள் இலவச சிறப்பு முகாமில் மேற்கொள்ளப்பட்டன. இதில் கிராமப்புற மக்கள் சுமாா் 200 போ் கலந்து கொண்டனா்.

அவா்களுக்கு மருத்துா்கள் ஆலோசனை வழங்கினா். சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை கண் பரிசோதனை செய்யப்பட்டு அதில் ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு புரைகளைக் கண்டறிந்து அதற்கான இலவச அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை வழங்கினா்.

தொடா்ந்து பசுமைக் குடில் கேத்தனூா் இயற்கை விவசாயி கே.வி.பழனிசாமி மருந்தடிக்கப்பட்ட காய்கறிகள் பல வியாதிகள் தரும் என்றும், காசு கொடுத்து நோயை வாங்குவது போன்று மலட்டு மண்களால் மலட்டுத் தன்மை பெண்களுக்கு ஏற்படுவதையும் எடுத்துரைத்தாா்.