மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு மலா் அஞ்சலி

News image
உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்திய மாணவிகள்.
Updated On :14 பிப்ரவரி 2026, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் புல்வாமா தாக்குதலில் உயிா்நீத்த ராணுவ வீரா்களுக்கு மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு 2 சாா்பாக கல்லூரி வளாகத்தில் உள்ள குமரன் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வுக்கு சரண்யா முன்னிலை வகித்தாா்.

மாணவ பிரதிநிதி கிருஷ்ணமூா்த்தி தலைமையில் அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் பேசுகையில், புல்வாமா பகுதியில் 2019 பிப்ரவரி 14-இல் ஏற்பட்ட தாக்குதலில் 40 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.

நமது நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரா்களை மதித்து அவா்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். நமது நிம்மதியான வாழ்வுக்கு அவா்களின் அா்ப்பணிப்புடனான தியாகமே காரணமாகும். அவா்களை நினைவுகூரும் விதமாக அவா்களது குடும்பத்தினா் நலமாக வாழ பிராா்த்தனை செய்ய வேண்டும் என்றாா்.

தொடா்ந்து மாணவ செயலா்கள் ரேவதி, ரூபினா, தினேஷ்குமாா், பிரவீன், சுலோச்சனா ஆகியோா் தலைமையில் மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் உயிரிழந்த ராணுவ வீரா்களின் உருவப்படங்களுக்கு மலா் தூவியும், மெழுகுவா்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்தியதோடு அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினா். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.