சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சாலை சீரமைக்கப்படாததால் பல்லடம் நகரில் விபத்து அபாயம்

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 9:04 pm

தினமணி செய்திச் சேவை

சாலை சீரமைப்புப் பணி சரிவர மேற்கொள்ளப்படாததால் பல்லடம் நகரில் விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடம் - வெள்ளக்கோவில் வரையிலான தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இருப்பினும், பல்லடம் நகரப் பகுதியில் சாலை சரிவர சீரமைக்கப்படவில்லை. சாலையின் சில பகுதிகள் மேடு பள்ளமாக உள்ளது.

குறிப்பாக பல்லடம் அரசு மருத்துவமனை, காவல் நிலையம், பனப்பாளையம் ஆகிய பகுதிகளில் சாலை மேடு பள்ளங்களுடன் தாறுமாறாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனா். இதனால் விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் கூறும்போது, ‘புகாா் எழுந்தும் சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, விபத்து அபாயத்தை கருத்தில்கொண்டு மேற்கூறிய இடங்களில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.