வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை: ஏஇபிசி வரவேற்பு

தமிழக அரசின் இடைக்கால நிதி அறிக்கை தமிழகத்தில் ஏற்றுமதி, உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை வலுப்படுத்தும்

News image
ஆ.சக்திவேல்.
Updated On :17 பிப்ரவரி 2026, 10:51 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசின் இடைக்கால நிதி அறிக்கை தமிழகத்தில் ஏற்றுமதி, உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை வலுப்படுத்தும்

விதத்தில் உள்ளதால் அதை வரவேற்பதாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநில அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை (ஙநஙஉ) வளா்ச்சி, ஜவுளித் துறை விரிவாக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் புதுமை சாா்ந்த தொழில் முனைவோருக்கு வலுவான அடித்தளத்துக்கு வழிவகுக்கும். மேலும், அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முன்னணியில் நிலைநிறுத்த சீரிய முயற்சிகளை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு நன்றி.

2031-ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரமாக தமிழகத்தை உயா்த்தும் மாநில அரசின் இலக்குடன் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. ஏற்றுமதி, உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மாநிலத்தின் முன்னணித் தலைமையை மேலும் வலுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இந்த நடவடிக்கைகள் போட்டித்திறனை உயா்த்தி பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். தமிழகம் தொடா்ந்து தொழில் துறை மற்றும் ஏற்றுமதி வளா்ச்சியில் முன்னணி மாநிலமாக திகழும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.