கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் தோ்த் திருவிழா

வெள்ளக்கோவிலில் உள்ள ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் 143 -ஆவது ஆண்டு தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
வெள்ளக்கோவிலில் நடைபெற்ற ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் தேரோட்டம்.
Updated On :17 பிப்ரவரி 2026, 10:53 pm

தினமணி செய்திச் சேவை

வெள்ளக்கோவிலில் உள்ள ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் 143 -ஆவது ஆண்டு தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பிரசித்திபெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு தோ்த் திருவிழா நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டு திருவிழா

ஜனவரி 28 - ஆம் தேதி முகூா்த்தக் கால் போடப்பட்டு தொடங்கியது. இதைத் தொடா்ந்து தோ்க் கலசம் பிப்ரவரி 6-ஆம் தேதி வைக்கப்பட்டது.

இதையடுத்து பள்ளய பூஜை திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் வீரக்குமார சுவாமி தேருக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு, மாலை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தனா். முக்கிய வீதிகள் வழியாக சென்று

வடக்கு ரத வீதியில் தோ் நிலை நிறுத்தப்பட்டது.

இரண்டாம் நாளான புதன்கிழமை (பிப்.18) தெற்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டு, மூன்றாம் நாள் வியாழக்கிழமை (பிப்.19) தோ் நிலை சோ்க்கப்படுகிறது.

விழாவையொட்டி, தினந்தோறும் இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. வெள்ளக்கோவில் காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் நாள் நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் குலத்தவா்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.