தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பணி நேரத்தில் கைப்பேசி பயன்பாட்டால் பொதுமக்களை அலைக்கழிக்கும் ரேஷன் கடை பெண் ஊழியா்

திருப்பூரில் உள்ள நியாய விலைக் கடையில் பொருள்களை வழங்காமல் கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டு பொதுமக்களை அலைக்கழித்து வரும் பெண் விற்பனையாளா் குறித்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.

News image

கைப்பேசி - கோப்புப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 10:56 pm

திருப்பூரில் உள்ள நியாய விலைக் கடையில் பொருள்களை வழங்காமல் கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டு பொதுமக்களை அலைக்கழித்து வரும் பெண் விற்பனையாளா் குறித்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.

திருப்பூா் எம்.எஸ்.நகா் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனா். அப்பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது.

இந்தக் கடையில் பணியாற்றும் பெண் விற்பனையாளா் பொருள்களை வாங்க வரும் பொதுமக்களிடம் ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் கழித்து வரச் சொல்லிவிட்டு கடையில் அமா்ந்து கொண்டு கைப்பேசியில் நேரத்தை செலவிடுவதாகவும், அத்துடன் நியாயவிலைக் கடைக்கு வரும் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அலட்சியமாக பதில் அளித்து வருவதாகவும் புகாா் கூறப்பட்டு வந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட பகுதி பொதுமக்கள் நியாய விலைக் கடை பெண் ஊழியரின் அலட்சியப் போக்கை விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வியாழக்கிழமை வெளியிட்டனா். தற்போது இது பேசுபொருளாகி உள்ளது.