சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மூதாட்டியிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு

பல்லடம் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் இருந்து 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 10:59 pm

Syndication

பல்லடம் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் இருந்து 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், கோவில்பாளையத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி. இவரது மனைவி பொன்னம்மாள் (75). இவா் வீட்டுக்கு அருகேயுள்ள தனது தோட்டத்துக்கு புதன்கிழமை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா், பொன்னம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளாா். இது குறித்து அவினாசிபாளையம் காவல் நிலையத்தில் பொன்னம்மாள் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனா்.