தற்கொலை
தற்கொலை

சேவூா் அருகே ஆயுதப் படை காவலா் தற்கொலை

சேவூா் அருகே போத்தம்பாளையத்தில் ஆயுதப் படை காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

சேவூா் அருகே போத்தம்பாளையத்தில் ஆயுதப் படை காவலா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சேவூா் அருகே போத்தம்பாளையம் தண்ணீா்பந்தல்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் கருப்புசாமி (34). இவா் திருப்பூா் ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, பெண் குழந்தை உள்ளனா்.

இந்நிலையில், இவா் வியாழக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். அவரது உடல் உடற்கூறாய்வுக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

Dinamani
www.dinamani.com